உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு 0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்