இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர

🕔 February 18, 2016
Dhayasri jayasegara - 865ந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில், இலங்கை தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

“இலங்கை அணி தோல்வியைத் தழுவுவதற்கு, இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்புக்கள்தான் காரணமாக அமைந்தன.

எனினும் எதிர்வரும் போட்டித் தொடர்களின் போது அவ்வாறான பிரச்சினை ஏற்படாது.

இந்திய நடுவர்களை விடவும் நல்ல நடுவர்கள் எமக்குக் கிடைப்பார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்