தலைப்புச் செய்திகள்

நாடு முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள்: மன்னாரில் குறைந்த எண்ணிகையில் அமையும்

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில், 1,765,351 வாக்காளர்களுக்கு 1,204 வாக்களிப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 வாக்காளர்களுக்கு 1,212 நிலையங்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,024,240 வாக்காளர்களுக்கு 735 வாக்களிப்பு நிலையங்களும் அமையவுள்ளன.

90,607 எனும் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மன்னார் மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களைத் தவிர, 2,034 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்படும். மொத்தம் 17,430,354 வாக்காளர்கள் எதிர்வதும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.