பிரதமர் இந்தியா பயணம்; காலை சென்று, மாலை திரும்புகிறார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 165 எனும் விமானத்தில், அவர் பயணமானார்.
தனது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுடன் இந்தியா சென்றுள்ள பிரதமர், இன்று மாலை நாடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவல பேச்சாளர் தெரிவித்தார்.