
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் – வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
50,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தற்போது வேலையின்றி இருப்பதாகவும் தற்போதைய அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கப்படும் என்றும், தொழில்முனைவோர் ஆவதற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அடிப்படை மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை வழங்க விரும்புவதாகக் கூறிய அவர், அரசு மற்றும் தனியார் துறை வேலைகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
வேலையற்ற பட்டதாரிகள் குழுவுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) இடம்பெற்ற சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இந்த விடயங்களைத் தெரிவித்தார்.



