
திரிபோஷ வழங்கப்படாமையினால் 06 மாதம் தொடக்கம் 03 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, அந்தக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைக் கூறினார்.
”06 மாதங்களுக்கும் அதிகமான 03 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்தோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைட்டுக்கு உள்ளாகி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.



