மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் மரணம்
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான முகம்மட் பாயிஸ் இன்று (02) இரவு காலமானார்.
தீடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.
கொழும்பு – மட்டக்குழியைச் சேர்ந்த இவர் – இரு தடவை மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.