கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் ஆஜராகியுள்ளார்.
ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்கவே, கோட்டா இன்று ஆஜரானார்.
இதற்கு முன்னர் முன்னரும் ஏழு தடவை, வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராயிருந்தார்.
சர்ச்சைக்குரிய எவன் கார்ட் ஆயுதக்கப்பல் விடயத்தில் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத் தொடர்புகள் குறித்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன.