பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது

🕔 May 2, 2023

– பாறுக் ஷிஹான் –

னுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல்கள் முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக – வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான டீ.எம்.எஸ்.கே. தசநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (2) வீதி ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது முச்சக்கரவண்டி ஒன்றில் சுமார் 38 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள், 175 க்கும் அதிகமான மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ஒரு தொகுதி ஆகியனவற்றை சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி மற்றும் மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் பல லட்சம் ரூபா பெறுமதியானவையாகும். இவ்வாறான பெருந்தொகை மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பதுக்கி கொண்டு சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்