உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

🕔 January 31, 2023
Person voting

டைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் எட்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெறவுள்ளது.

அந்த வகையில் 340 சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெறவிருந்த போதிலும், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுக்களை பொறுப்பேற்க வேண்டாமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 339 சபைகளுக்கான தேர்தல்களே நடைபெறவுள்ளன. இச்சபைகளில் இருந்து 8667 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்