பெண்ணாக வேடமிட்டு, 61 வயது ஆண் ஒருவரை ஏமாற்றி, பணம் மோசடி செய்த நபர் கைது

🕔 December 27, 2022

பெண்ணாக வேடமணிந்து, இரத்தினபுரியிலுள்ள ஆண் ஒருவரை ஏமாற்றி 2.5 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபரொருவரை கொடகாவெல பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

ரக்வென பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், பெண் போல் ஆள்மாறாட்டம் செய்து, இரத்தினபுரியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு குறித்த ஆணுடைய வீட்டுக்கு அருகிலுள்ள பண்ணையில் சந்தேக நபர் பணிபுரிந்த போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர், தான் திருமணம் செய்து கொள்ள ஒரு பெண்ணைத் தேடித் தருமாறு, சந்தேக நபரிடம் கேட்டுள்ளார்.

அதன் பின்னர், சந்தேக நபரான ஆண், ஒரு பெண்ணாக வேடமிட்டு, பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததாகவும், பல சந்தர்ப்பங்களில் மேற்படி 61 வயதுடைய நபரை பெண் வேடமிட்டவர் ஏமாற்றியதாகவும் சந்தேக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்