கொழும்பில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

🕔 June 6, 2022

கொழும்பு – முகத்துவாரம் ரெட்பானா வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (6) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 23 வயதான இளைஞரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 04 நாட்களில் நாட்டில் நடைபெற்ற 05 ஆவது துப்பாக்கி சூட்டு சம்பவம் இதுவாகும்.

இவற்றில் ஐவர் கொல்லப்பட்டனர். எனினும், இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

தொடர்பான செய்தி: 48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்