48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி

🕔 June 4, 2022

ஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அஹங்கம – பஞ்சாலயவில் இன்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.

பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்று முன்தினம் அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கமவில் கொல்லப்பட்ட நபர், சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை மீண்டும் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் அரச சாட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்ய 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்