நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

🕔 January 2, 2016

Hakeem - 756
பொ
லன்னறுவை, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்மையினால், பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொலன்னறுவை ஹிங்குராகொட றோட்டுவாவ – ஆலோஹராம விஹாரை வளாகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை (ஆர்.ஓ. இயந்திரத்தை) இன்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்ட தகவலை அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வில் அசைச்சின் மேலதிகச் செயலாளர்களான எம். முயூனூதீன் (அபிவிருத்தி), டீ.எம்.சீ. திசாநாயக்க (நிதி, நிர்வாகம்), தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஐ.ஏ. லத்தீப், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடமத்திய மாகாண பிராந்திய பொது முகாமையாளர் நசுதத் ரத்நாயக்க உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் இவ்வாறான நீரை சுத்திகரிக்கும் ஆர்.ஓ இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.Hakeem - 757

Comments

புதிது பேஸ்புக் பக்கம்