132 பேருடன் பயணித்த சீன விமானம் விபத்து: காடுகளில் தீ

🕔 March 21, 2022

சீனாவின ‘ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த விமானத்தில் 123 பயணிகளும் 09 பணிக்குழுவினரும் இருந்தனர் என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.

விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் முதல் குழுவினர் நிகழ்விடத்துக்குச் சென்றடைந்திருக்கின்றனர்.

வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரான குவாங்சோவின் அண்டை மாகாணமாகும்.

சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்