எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி

🕔 March 21, 2022

ரிபொருள் நெருக்கடி காரணமாக நிட்டம்புவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவ – ஹொரகொல்ல எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதத்தின் போது முச்சக்கர வண்டி சாரதி> மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை கத்தியால் குத்தியுள்ளார்.

முன்னதாக, பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக காத்திருந்த இருவர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விழுந்து உயிரிழந்தனர்.

கடும் வெப்பத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்