அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் திருட்டு நடவடிக்கை: களத்தில் பொலிஸார்

🕔 February 7, 2022

– அஹமட் –

க்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி உடைக்கப்பட்டு திருட்டு நடவடிக்கையொன்று இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச செயலக அதிகாரத்தின் கீழுள்ள மேற்படி வங்கி, கடந்த இரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கியினுள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள், அங்குள்ள காசு வைக்கும் இரும்புப் பெட்டியையும் உடைப்பதற்கு முயற்சித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

பணம் மற்றும் பொருட்கள் திருட்டுப் போயுள்ளனவா என்கிற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்