சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதில் தவறில்லை: விமல்

🕔 February 5, 2022

ர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தலங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிப்பதே பாரிய பிரச்சினையாகும்.

எனவே அரசாங்கம் முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களில் எவ்வித குறைப்பாடுகளும் இல்லை” என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் வாசுதேவ நாணயகார தவிர்ந்த, அமைச்சரவை உறுப்பினர்கள் – சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்