கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

🕔 January 31, 2022

ல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறும்.

நாடளாவிய ரீதியில் 2438 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறும் இந்தப் பரீட்சையில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட ரீதியில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் இம்முறை தோற்றுகின்றனர்.

இப்பரீட்சைக்கென 316 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்காக இரண்டு விசேட அறைகள் வீதம் ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்திலும் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்