திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

🕔 December 25, 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர் இந்த உத்தரவை வழங்கினார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், தனது வாகனத்தில் தப்பித்து மொனராகல – எத்திமல பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து, அம்பாறை மாவட்டத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

இதன்போதே, அவர் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்