பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது

🕔 December 25, 2021

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக, மாத்தறை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நேற்று (24) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரி, தற்போது மாத்தறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்