பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் ராஜிநாமா: அமைச்சர் கம்மன்பிலவின் அழுத்தம் காரணமா?

🕔 December 21, 2021

லங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில் இருந்து உவைஸ் மொஹமட் விலகுவதாக அறிவித்துள்ளார்.

உவைஸ் மொஹமட்டை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

உவைஸ் மொஹமட்டுடன் பணிகளை மேற்கொள்ள முடியாது என கூறி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அத்துடன், பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில் இருந்து உவைஸ் மொஹமட்டை விலக வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தான் பதவி விலகுவதாக உவைஸ் மொஹமட் இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்