சிறுவர் துஷ்பிரயோகம்: இந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் வருத்தமளிக்கும் விடயம் குறித்து அமைச்சர் டலஸ் கருத்து
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நொவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 1,632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி முழுத் தொகையினரில் 06 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2,626 சிறுவர்களும் அடங்குவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.