மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்
தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தினை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
அத்துடன் எரிபொருள் கடனை வழங்குவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா எந்தவொரு நிபந்தனையினையும் விதிக்கவில்லை” எனவும் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.