தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மரணம்

🕔 October 14, 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுசைன் இஸ்மாயில் இன்று காலமானார்.

அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் பேருவளையை சொந்த இடமாகக் கொண்டவராவார்.

இவரின் மறைவு தொடர்பில் தென்கிழக்குப் பலகலைக்கழகம் தனது இரங்களை வெளிட்டுள்ளது.

மேலும், பல்வேறு தரப்பினரும் இவரின் மறைவு குறித்து தங்கள் கவலையை வெளியிட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்