மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில்

🕔 October 14, 2021

கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணித்துள்ளனர். இவர்கள் கிருமிநாசினியை உட்கொண்டமையினால் மரணித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களுடன் மேற்படி கிருமிநாசினியை உட்கொண்ட மேலும் 10 ஈரானியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்