ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 September 28, 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஆசாத் சாலியை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, ஷரீஆ சட்டம் தொடர்பில் சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்