ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

🕔 September 16, 2021

ஸ்டர் தின தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் விரைவில் நடைபெற போவதாக ஞானசார தேரர் கூறியமை தொடர்பில், உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘ஈஸ்டர் தின தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் விரைவில் நடைபெறப் போவதாக ஞானசார தேரர் செப்டம்பர் 13ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஞானசார தேரரின் இக்கூற்றானது பொது மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈஸ்டர் தின தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அதனைத் தொடர்ந்து இந்நாட்டில் வாழும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளையும், சவால்களையும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

எனவே, உரிய அதிகாரிகள் குறித்த தேரரின் கூற்று தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இந்நாட்டின் பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

அத்துடன், குறித்த தேரர் இஸ்லாம் பற்றி முன்வைத்திருக்கும் அடிப்படையற்ற குற்றச்சாற்றுக்களுக்கான பதில்களை வெகு விரைவில் நாம் வழங்குவோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்’.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்