தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது

🕔 September 4, 2021

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 07 பேர் இன்று (04) காலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் இருந்து 301 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு மீன்பிடி படகு ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகையை எடுத்துச் சென்ற 07 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகினை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற விசேட புலனாய்வுத் தகவல் ஒன்றுக்குகு அமைய, இலங்கை கடற்படையால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்