பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு
பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இம்மாதம் 11ஆம் திகதி, விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்