மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

🕔 June 6, 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.

இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேல் இவர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்சிக் காலத்தின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையினாலேயே, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டதாக சபீக் ரஜாப்தீன், தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி: விடியல்

தொடர்பான செய்தி: கிழக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு மு.காங்கிரசின் பொருளார் பதவி; ஹக்கீம் வழங்கினார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்