பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

🕔 May 17, 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்