சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது
சஹ்ரான் ஹாசிமுடைய ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில், நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மூதூர் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளை நிறைவு செய்தவர்களுக்கு இவ்வாறு வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது