முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 March 16, 2021

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுபிட்டியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஆசாத் சாலி கைது செய்யப்படுவார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – ஓரிரு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியிலும், ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்