ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை
இலங்கை கிறிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை.
அவருக்கான விலையாக 50 லட்சம் இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்த நிலையில், 2021 ஐபிஎல் ஏலத்தில் தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர கிறிஸ் மொரிஸ் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளார்.
அவரை 16.25 கோடி இந்திய ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
இதன் மூலம் யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள சாதனையை சாதனையை கிறிஸ் மொரிஸ் முறியடித்துள்ளார்.