ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட வீடியோ தொடர்பில், இலங்கை கடும் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோகள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக ட்விட்டர் கணக்கில், இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோகள் – சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டன.
கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை தவறியுள்ளதாகவும், மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக ட்விட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாக, இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.