ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

🕔 February 1, 2021

ஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேற்படி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்தவற்காக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐவர் அடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

ஒன்றரை வருட காலமாக சுமார் 440 நபர்களிடம் சாட்சியம் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றன.

அதன்படி, குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்