மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

🕔 January 5, 2021

மாவனல்ல – இம்புல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றை சேதப்படுத்திய சந்தேகநபரை, மாவனல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் ஊடக ​பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்;

“பிரியந்த சமபத் குமார என்ற நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபராவார். சந்தேகநபர் இதற்கு முன்னர் வணக்கஸ்தலம் ஒன்றில் உண்டியல் ஒன்றை உடைத்து திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புத்தர் சிலைக்கு அருகில் இருந்து 60 ரூபாவினை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்