உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை

🕔 January 2, 2021

க்ரேன் நாட்டில் இருந்து இலங்கைக்கு மேலும் 175 பேர் சுற்றுலாப் பயணிகளாக இன்று சனிக்கிழமை வருகை தந்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இவர்கள் வந்திறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே உக்ரேனில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 06 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்திருந்தது.

கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் 185 சுற்றுலா பயணிகள் உக்ரேனில் இருந்து கடந்த 28 ஆம் திகதி நாட்டுக்கு வருகைத்தந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இரண்டாம்  கட்டமாக  மேலும் 204 சுற்றுலா பயணிகள் அந்த நாட்டிலிருந்து கடந்த 29 ஆம் திகதி  இலங்கைக்கு வருகை தந்தனர்.

இவர்களில 06 நபர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே, இன்று மீண்டும் 175 பேர் உக்ரேனில் இருந்து வந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்