உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி
உக்ரேனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்தவர்களில் மூன்று பேர் – கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
உக்ரேனிலிருந்து 185 சுற்றுலாப் பயணிகளுடன் விஷேட விமானமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் இலங்கையில் ஏற்பட்ட பின் இலங்கைக்கு சுமார் 09 மாதங்களின் பின்னர் வருகை தந்த முதல் சுற்றுலாப் பயணிகள் குழுவினர் இவர்களாவர்.
இவ்வாறு வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.