போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும்

🕔 December 29, 2020

னரக வாகன அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப காலத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்க கூடாது என்று வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களுக்கு கனரக வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 01 ஆம் திகதி முதல் இது சம்பந்தமான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் மற்றும் கனரக வாகன சாரதிகள் போதையுடன் வாகனம் செலுத்துகின்றார்கள் என்று கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த புதிய முறை செயற்படுத்தப்படுவதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்