ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

🕔 December 24, 2020

ஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி 50 லட்சம் ரூபா) என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் கேட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ; இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட நிதி என்பதால், அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயம் என விஜயதாஷ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’கும் கலந்துகொண்டது என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ, அந்த அமைப்பின் தலைவர் ஈஸ்டர் தின தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து மில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்ததை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததையும் விஜயதாச ராஜபக்ஷ நினைவுபடுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்