ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து

🕔 November 27, 2020

ஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் உ- பதட்டப்படாதவர் என, உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் சிசிரிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இந்தக் கருத்தை, ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஷங்கிரி லா ஹோட்டலில் சஹ்ரான் ஹாசிமுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் குறித்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த நிலைமையிலும் அவர் தனது நடவடிக்கை குறித்து மிகவும் கவனத்துடன் காணப்பட்டார். பொதுமக்கள் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படுத்திய லிப்டிற்கு அருகில் தாக்குதலை மேற்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடையில் தனது வீட்டில் தன்னை வெடிக்கவைத்த இல்ஹாமின் மனைவி பாத்திமா ஜிவ்ரி எவ்வாறானவர் என உளவியல் சிகிச்சை நிபுணரிடம் ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.

அந்த நிலைமையை தெளிவுபடுத்தியுள்ள நெய்ல்பெர்ணான்டோ; பாத்திமாக நம்பிக்கையற்ற நிலையில் காணப்பட்டிருக்க வேண்டும். தன்னால் அந்த சூழ்நிலையிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்திருக்க வேண்டும். தன்னையும் குழந்தைகளுடன் சேர்த்து வெடிக்க வைப்பதுதான் ஒரேயொரு வழி என அவர் கருதியிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் அவரின் நிலையை முழுமையாக அறியவேண்டும் என்றால், உளவியல் மரணவிசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்