கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது

🕔 November 23, 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 03 பேர் பலியாகியுள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனாவினால் மரணமானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண், கொழும்பு – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஆகியோரே இவ்வாறு மரணித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை (திங்கட்கிழமை இரவு 10.11மணி வரை) 20,508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 14,497 பேர் குணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்