பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

🕔 November 22, 2020

மைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார்.

தற்போது ராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படுவார்.

பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் காணப்படும்.

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் ஜனவரியில் இடம்பெறும் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள், ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது பசில் ராஜபக்ஷவும் அமைச்சரவையில் உள்வாங்கப்படுவார் என தெரிவித்துள்ளன.

இந்த வாரம் பசில்ராஜபக்ஷவை சம்மதிக் கவைப்பதற்கான முயற்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமல் ராஜபக்ஷ தனது ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பணிச்சுமையை குறைப்பதற்காக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் தொடர்ந்தும் நீர்ப்பாசனதுறை அமைச்சராக பதவி வகிப்பார்.

இதற்கான அனுமதியை அவர் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் சமல் ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நன்றி: தினக்குரல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்