பிள்ளையானின் கட்சி செயலாளர் பிரசாந்தன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

🕔 November 12, 2020

– பாறுக் ஷிஹான் –

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  செயலாளர் பூ. பிரசாந்தன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிரசாந்தன் பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த படுகொலை  வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற  குற்றச்சாட்டில், தற்போது  கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

பிள்ளையானும் 2005 ஆண்டு இடம்பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்