மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

🕔 November 11, 2020

கொரோனாவினால் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை பிற்பகல்  உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் படி இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உயிரிழந்த, இலங்கையர்களின் எண்ணிக்கை 109 ஆகும். 

இலங்கையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிவரை 14,715 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்