சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு

🕔 November 7, 2020

ஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை – வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25 வயதான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

அவருடன், வெலிகட சிறைச்சாலையிலிருந்த கொரோனா தொற்றாளர்களில் 28 பேருக்கும் வெலிக்கந்தயிலுள்ள கொவிட் 19 மத்திய நிலையத்தில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்