த.மு.கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்: மனோ கணேசன் அதிரடி

🕔 October 23, 2020

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது பங்காளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த குமாரை, தமது கூடட்ணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்றைய தினம் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு – இது தொடர்பில் ஆராயும் என்றும், அதன் பின்னர் கூட்டணி கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் விலக்கப்படுவார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரவிந்த குமார் தொடர்பான மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு அவரது சொந்த கட்சியான மலையக மக்கள் முன்னணியைக் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்