றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார்

🕔 October 22, 2020

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபை அமர்வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நாடாளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்